×

கம்பெனி ஊழியர் காரில் கடத்தல்

அண்ணாநகர்: கோயம்பேடு, திருநகர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (31), தனியார் கம்பெனி ஊழியர். இவர், அதே பகுதியில் வெங்கடேசன், பெருமாள் ஆகியோர் நடத்தி வரும் நிதி நிறுவனத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ₹3 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.
ஆனால், இதனை திருப்பி செலுத்தாமல், காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு, தங்கராஜ் வீட்டுக்கு சென்ற வெங்கடேசன், பெருமாள் உள்பட 3 பேர் பணத்தை கேட்டு தகராறு செய்தனர். அப்போது, தங்கராஜ் தன்னிடம் இப்போது பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மூவரும், தங்கராஜை சரமாரி தாக்கி காரில் கடத்திச் சென்றனர். பின்னர், கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கராஜை அடைத்து வைத்து, பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

நேற்று அதிகாலை அங்கிருந்து தப்பிய தங்கராஜ் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். தகவலறிந்து வந்த கோயம்பேடு போலீசார் தங்கராஜிடம் விசாரித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, காரில் கடத்திச் சென்று சித்ரவதை செய்த 3 பேரை தேடி வருகின்றனர்.

Tags : Kidnapping, company employee
× RELATED பறக்கும் படை சோதனையில் ரூ.15 லட்சம் பறிமுதல்