வீரனின் தலைக்கொண்டை அலங்காரத்துடனும், இரண்டு நீண்ட காதணிகள் அணிந்துள்ள நிலையில், கைத்தண்டை, கைக்காப்பு, காற்சிலம்பு போன்றவை மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முகம் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. மேட்டுப்பட்டி மாரியம்மன் கோயில் பங்குனி மாத திருவிழாவின்போது, இந்த நடுகல்லை மக்கள் காவல் தெய்வமாக வழிபட்டு சிறப்பு பூஜையும் செய்கின்றனர். நடுகல் அமைவிடம் முன்பு சிமென்ட் கற்களைக் கொண்டு தரைத்தளமும், விளக்கு ஏற்றுவதற்கு ஒரு சிறு கூடாரமும் அமைத்துள்ளனர்.
Tags : gunman ,Rajapalayam Rajapalayam , Discovery of sculptures with gunman found near Rajapalayam