சென்னை: கொரோனா வைரஸிலிருந்து காத்து கொள்ள பள்ளி மாணவர்களுக்கு கை கழுவும் பழக்கத்தை அறிவுறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பள்ளி மாணவர்கள் சோப் பயன்படுத்தி கை கழுவ ஏற்பாடு செய்யுமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.