×

வீட்டுக்காவலில் இருந்து ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா விடுதலை

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவை விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பரூக் அப்துல்லா பொதுப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டமான 370 ரத்து செய்யப்பட்ட பிறகு பரூக் அப்துல்லா வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டார். அவர் ஸ்ரீநகரில் கடந்த 7 மாதங்களாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டம் ஆகஸ்ட் 5ம் தேதி நாடாளுமன்றத்தில் ரத்து செய்யப்பட்டது. சிறப்புத்தகுதி ரத்தால் பதற்றம் ஏற்படும் என்பதால் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, முகபூபா முப்தி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

Tags : chief minister ,Farooq Abdullah ,Jammu ,Kashmir ,house arrest , Farooq Abdullah
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...