ஒடிசா: ஒடிசா மாநிலத்தில் பள்ளிகள் மற்றும் திரையரங்குகளை மார்ச் 31 வரை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஒடிசாவில் கோயில் திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களை உள்ளாட்சி மன்றங்கள் ஒழுங்குபடுத்த அரசு அறிவுறுத்தியுள்ளது. அவசியமற்ற அரசு மாநாடுகள் மற்றும் பயிற்சி பட்டறைகளையும் ரத்து செய்து முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.