×

சிந்தியா மீதான வழக்கை தூசி தட்டியது மத்திய பிரதேச அரசு

போபால்: பாஜகவில் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க தொடங்கியது மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு. காங்கிரசில் இருந்து விலகியதால் 2014ல் போடப்பட்ட வழக்குக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்துள்ளது மாநில அரசு. ரூ.10 ஆயிரம் கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை பலமுறை விற்று மோசடி செய்த வழக்கில் சித்தியாவுக்கு தொடர்பு என புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. சிந்தியா மீதான புகாரை மாநில பொருளாதார குற்றப்பிரிவு மீண்டும் விசாரிக்க தொடங்கியுள்ளது.

Tags : government ,Madhya Pradesh ,Cynthia , Cynthia
× RELATED பாஜவின் கோட்டைகளிலும் மோடிக்கு ஏன் பயம்?