×

நைஜீரியாவில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 9 பாதுகாப்பு படையினர் பலி

தில்லபேரி: ஆப்பிரிக்க நாடுகளான மாலி, நைஜீரியாவில் போகோஹராம், ஐஎஸ் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத குழுக்கள் பாதுகாப்பு படையினரையும், பொதுமக்களையும் குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல்களுக்கு பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நைஜீரியாவையும் மாலி நாட்டையும் இணைக்கும் எல்லையோர பகுதியான தில்லபேரி மாகாணத்தின் அயுரோவ் என்ற பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் நைஜீரிய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது திடீர் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்றனர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 9 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நைஜீரிய படைகள் அதிரடியாக வான்வெளி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டதாக அந்நாட்டு ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

Tags : Terrorists ,Nigeria ,security forces ,soldiers , Nigeria
× RELATED 133 பேர் பலியான மாஸ்கோ தாக்குதல்...