×

வேறு பெண்ணுடன் வாழ முடிவு செய்ததால் பெட்ரோல் ஊற்றி கணவனை எரித்துக்கொன்ற மனைவி: நாமக்கல் அருகே நள்ளிரவில் கொடூரம்

சேந்தமங்கலம்: வேறு பெண்ணுடன் குடும்பம் நடத்த முடிவு செய்ததால், கணவனை பெட்ரோல் ஊற்றி நள்ளிரவில் மனைவியே எரித்துக்கொன்றார்.  இதுதொடர்பாக தாய், மகளுடன் அவர் ைகது செய்யப்பட்டார்.நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அடுத்துள்ள ஜீவா நகரை சேர்ந்தவர் கந்தசாமி (45), பில்டிங் காண்ட்ரக்டர். இவரது மனைவி அங்கம்மாள்(40).  இவர்களது மகள் சாந்தி(19) ஒரு வாலிபருடன் காதல் ஏற்பட்டு, அவருடன் வீட்டை விட்டு வெளியேறியவர்,  கருத்து வேறுபாடு காரணமாக அவரை  பிரிந்து பெற்றோர் வீட்டுக்கே வந்து விட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அங்கம்மாளும், சாந்தியும் அருகில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றுவிட்டனர். கந்தசாமி மட்டும் வீட்டின்  வெளியே கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவில் கந்தசாமி மீது யாரோ பெட்ரோலை ஊற்றி தீ வைத்து ஓடிவிட்டனர்.அக்கம்பக்கத்தினர்  அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று அதிகாலை கந்தசாமி உயிரிழந்தார்.

இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதுபற்றி போலீசார் கூறியதாவது: பில்டிங்  காண்ட்ராக்டரான கந்தசாமிக்கு, சேலத்தை சேர்ந்த  சரோஜா என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. அவருடன் வாழ முடிவு செய்ததாக கூறப்படுகிறது.  இதனால் மனைவி அங்கம்மாள், மகள் சாந்தியை கொலை செய்ய, கந்தசாமி திட்டம் தீட்டியுள்ளார். இது அங்கம்மாளுக்கு தெரியவே கந்தசாமியை கொலை செய்ய அவர்கள் முடிவு செய்தனர். அதன்படி, நேற்று முன்தினம் நள்ளிரவு கந்தசாமி அயர்ந்து  தூங்கி கொண்டிருக்கும் போது, அங்கம்மாள், அவரது தாய் எல்லம்மாள் (65), மகள் சாந்தி ஆகியோர் கந்தசாமி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து  விட்டு ஓடி விட்டனர். விசாரணையில் அவர்கள் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து,அங்கம்மாள் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார்  கைது செய்தனர்.



Tags : Namakkal , decided , live ,another woman, midnight ,Namakkal
× RELATED நாமக்கல்லில் தொழிலதிபர் வீட்டில் வருமானவரி சோதனை