×

வறட்சியால் கருகிய மக்காச்சோளத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும்: கலெக்டரிடம் விவசாயிகள் மனு

மதுரை: வறட்சியால் பாதித்த மக்காச்சோளத்திற்கு நிவாரணம் வழங்க கோரி பேரையூர் பகுதி விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர். மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவிற்கு உட்பட்ட சிலார்பட்டி, செங்குளம் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த 2018-2019ல் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டது. போதிய மழை இல்லாததால் பயிர்கள் கருகின. கருகிய பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து வறட்சி நிவாரண குழுவினர் பார்வையிட்டு நிவாரணம் வழங்க பரிந்துரை செய்தனர். ஓராண்டுக்கு மேலாகியும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாராயணசாமி தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் வினயை சந்தித்து மனு அளித்தனர். மனுவில், வறட்சி நிவாரணம் வழங்காததால் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளனர்.


Tags : Drought, maize, relief, collector, farmers
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...