×

எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: மாநிலங்களவையில் அமித் ஷா பேச்சு

டெல்லி: எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநிலங்களவையில் அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லி வன்முறை தொடர்பான விவாதத்திற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் பதிலளித்தார். குற்றவாளிகள், அவர்கள் எந்த மதத்தையோ, சாதியையோ, கட்சியையோ இருக்கலாம், அவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் சட்டத்தின் முன் கொண்டுவரப்படுவார்கள் என அமித் ஷா தெரிவித்துள்ளார்.

Tags : rioters ,Amit Shah , Riots, action, Rajya Sabha, Amit Shah
× RELATED அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியதால் பரபரப்பு..!!