×

மைசூரு அருகே பந்திப்பூர் தேசிய பூங்காவில் யானை மீது வனத்துறை அதிகாரி ஒருவர் துப்பாக்கி சூடு

பெங்களூரு : கர்நாடக மாநிலம் மைசூரு அருகே பந்திப்பூர் தேசிய பூங்காவில் யானை மீது வனத்துறை அதிகாரி ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. பந்திப்பூர் தேசிய பூங்காவில் பல்வேறு வகையான அறிய வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.இந்த வனப்பகுதியில் கடந்த சனிக்கிழமையன்று உமேஷ் மற்றும் ரஹீம் ஆகிய 2 வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அவர்களது வாகனத்தை கம்பி வேலிக்கு மறுபுறம் இருந்த யானை ஒன்று விரட்ட முயற்சித்துள்ளது. உடனே வாகனத்தில் இருந்த ரஹீம் என்பவர் யானையை துப்பாக்கியால் சுடும் காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளன. வனத்துறை அதிகாரி ரஹீம், யானையை சுடும் காட்சி உடன் இருந்த மற்றொருவர் படம் பிடித்து வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட உயர் அதிகாரிகள், ரஹீமை பணிநீக்கம் செய்துள்ளனர்.


Tags : forest officer ,Bandipur National Park ,Mysuru , Bandipur, national park, elephant, shooter
× RELATED ஏற்காட்டில் 3 இடங்களில் ஏற்பட்ட தீ அணைப்பு