சேலம்: திருப்பூர் மாவட்டம் கள்ளிபாளையம் எஸ்.பி.ஐ வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட 600 சவரனில் 85 சவரன் நகை, ரூ.11 லட்சம் மீட்கப்பட்டுள்ளது. கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட அணில் சிங் அளித்த தகவலை அடித்து சேலத்தில் போலீசார் நகைகளை மீட்டுள்ளனர். பல்லடம் அருகே கள்ளிபாளையம் எஸ்பிஐ வங்கியில் கடந்த மாதம் 23ம் தேதி 600 சவரன், ரூ.19 லட்சம் கொள்ளை போனது குறிப்பிடத்தக்கது.