×

சிஏஏ-வுக்கு எதிரான டெல்லி ஷாகீன்பாக் போராட்டத்தை தீவிரப்படுத்த நிதியுதவி செய்ததாகக் கூறி இருவர் கைது

டெல்லி: டெல்லி ஷாகீன்பாக் போராட்டத்தை தீவிரப்படுத்த நிதியுதவி செய்ததாகக் கூறிப் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தென்கிழக்கு டெல்லியில் உள்ள ‌ஷாகீன்பாக் பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடந்து வருகிறது. அங்குள்ள கலிந்தி குஞ்ச் சாலையை மறித்து போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே இந்த போராட்டத்தில் எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே கடந்த மாதம் ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் 53 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்தப் போராட்டத்துக்கு நிதியுதவி செய்ததாகவும் பண மோசடியில் ஈடுபட்டதாகவும் கூறிப் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் டெல்லி மாநில நிர்வாகிகளிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த அமைப்பின் தலைவர் பர்வேஸ் அகமது, செயலாளர் முகமது இலியாஸ் ஆகியோரை டெல்லிக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


Tags : protest ,two ,CAA CAA ,Delhi , CAA, Delhi, two , arrested
× RELATED திருப்பத்தூரில் கடும் வெயில் காரணமாக இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது