×

கோழியை பிடிக்க சென்ற வாலிபர் 90 அடி ஆழ கிணற்றில் விழுந்தார்

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அடுத்த புலனேரி  பகுதியை சேர்ந்த சீனு(33). இவர் எரிக்கோடி சிகே ஆசிரமம் புரிகாமனிமிட்டா பகுதியில் உறவினர் சகுந்தலாபிரபு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சகுந்தலா சீனுவிற்கு விருந்தளிக்க தனது வீட்டில் இருந்த கோழியை தேடினார். அப்போது அந்தக் கோழி அருகே இருந்த தண்ணீர் இல்லாத 90 அடி கிணற்றில் விழுந்து இருந்தது. அந்த கோழியை மீட்க  கிணற்றின் மேலே இருந்து சீனு கயிறு கட்டி கீழே இறங்கினார்.

அப்போது திடீரென கயிறு அறுந்து கிணற்றில் சீனு விழுந்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு உடனடியாக தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கயிறு கட்டி படுகாயமடைந்த சீனுவை உயிருடன் மீட்டனர். பின்னர் அவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Tiruppattur
× RELATED சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள...