சென்னை: சென்னை எழிலகம் வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் கொள்ளை நடைபெற்றுள்ளது. இரவு காவலாளிகள் பணியிலிருந்த நிலையிலும் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் பணிக்கு வந்த பிறகு கொள்ளைப்போன பொருட்களின் விபரம் தெரியவரும் என போலீஸ் தகவல் அளித்துள்ளது.