×

கணவர் திருநங்கையாக மாறியதால் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க முடியாது: சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: ஜீவனாம்சம் கோரி திருநங்கையாக மாறியவரின் மனைவி தாக்கல் செய்த மனுவிற்கு ஜீவனாம்சம் வழங்க முடியாது என்று கூறி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையை சேர்ந்தவர் மணிமேகலை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் எனக்கு கடந்த 1998ம் ஆண்டு ராமானுஜம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் எங்களுக்குள் எந்த தாம்பத்திய உறவும் ஏற்படவில்லை. இதனால் மருத்துவரை அணுகினோம். அப்போது, மருத்துவர் சிகிச்சை எடுத்தால் சரியாகிவிடும் என்று தெரிவித்தார். இருந்தும் சரியாகவில்லை. இந்தநிலையில் தத்து குழந்தை எடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்தோம். அதற்கு அவரது உறவினர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர் என்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார்கள். எனவே எனக்கு தங்குவதற்கு ஒரு வீடு, மாதம் சாப்பாட்டிற்கு ₹5ஆயிரம் ஜீவனாம்சம், 10 லட்சம் பணத்தை, ராமானும் வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராமானுஜத்திற்கு சென்னை மாவட்ட சட்ட பணிகள் ஆணையகுழு சார்பில் வழக்கறிஞர் நியமிக்கப்பட்டது. பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் மனுதாரரின் கணவர் தன்னை ஒரு திருநங்கை என்று சமுதாயத்திற்கு அறிவித்து நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். அதற்கு அரசு வழங்கிய ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளார்.மேலும், திருமணம் முடிந்து, கணவன் மனைவி என்ற உறவு முழுமையாக ஏற்பட அவசியமான தாம்பத்திய உறவு பூர்த்திடையவில்லை என்று இருவரும் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளனர்.

எனவே இருவரையும் கணவன், மனைவி என்று தகுதியை அடைந்ததாக கருத இயலாது. மேலும், இந்து திருமணத்தில் கணவன் மனைவிக்கு இறக்கும் வரை ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்பதை மறுப்பதிற்கில்லை. ஆனால் இந்த வழக்கில் விசித்திரமாக தன்னை ஒரு திருநங்கை என்று தெரிவித்துள்ளார். அவரே பணம் இல்லாமல், பிச்சை எடுத்து சாப்பிட்டு, அரசு ஆதரவில் வாழ்ந்து வருவதாக கூறியுள்ளார். இருவருக்கும் திருமணமாகிவிட்டதே என்று ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட இயலாது. என்று கூறி உத்தரவிட்டார்.



Tags : Saidapet Court ,Saidapet , husband ,transgender,o wife, Saidapet, court ruling
× RELATED புதிய நீதிமன்றம் தொடக்கம்