×

கொடைக்கானலில் 20 ஏக்கரில் காட்டுத்தீ

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில், கோடை வெயில் போல் கொளுத்தி வருவதால் வறண்ட சூழ்நிலை நிலவுகிறது. நேற்று கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கோவில்பட்டி அருகே பலாகெவி பகுதியில் காட்டுத்தீ பற்றியது. தீ மளமளவென பரவியதில் சுமார் 20 ஏக்கர் நிலத்தில் உள்ள அரிய வகை மரங்கள், செடி, கொடிகள் எரிந்து சாம்பலாயின. பின்னர் 3 மணிநேரத்தில் தீ தானாகவே அணைந்து விட்டது. இதுகுறித்து வனத்துறை ரேஞ்சர் ஆனந்தகுமார் கூறுகையில், ‘‘வனப்பகுதியில் தீப்பிடிக்கவில்லை. பட்டா நிலமாகும் வனப்பகுதியில் காட்டுத்தீயை தடுக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

Tags : Kodaikanal. , Kodaikanal, 20 acres, wildfire
× RELATED கொடைக்கானலில் வறண்ட முகம் காட்டும்...