சென்னை: ஆவடி அருகே பட்டாபிராமில் உள்ள கிருஸ்தவ தேவாலயத்தில் எலியாஸ் என்பவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். சர்ச் ஊழியர் எலியாஸை மர்ம நபர்கள் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினர். கஞ்சா போதையில் வந்த மர்ம நபர்கள் எலியாஸைக் கத்தியால் குத்திக் கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைப் கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.