×

3 ஆயில் மில்களில் ஐடி ரெய்டு: கோபி அருகே பரபரப்பு

கோபி: கோபி அருகே உள்ள 3 ஆயில் மில்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொளப்பலூர் காமராஜ் நகரில் பத்மாவதி, கிங், வெங்கடேஷ்வரா என 3 ஆயில் மில்கள் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. இந்த மில்களில் இருந்து ரீபைன்ட் ஆயில், நல்லெண்ணெய் வகைகள் தயாரிக்கப்பட்டு தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்த 3 ஆயில் மில்களும் ஈரோட்டை சேர்ந்த சண்முகம் மற்றும் ஆறுமுகம் ஆகியோருக்கு சொந்தமானது.

இந்த நிலையில் மேற்கண்ட ஆயில் மில்களில் கோவை மற்றும் ஈரோட்டை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் மில்லில் உள்ள இருப்பு, வரவு, செலவு குறித்தும் சோதனை நடத்தினர். நிறுவன உரிமையாளர்கள் சண்முகம், ஆறுமுகம் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

Tags : oil mills ,Kobe , 3 Oil Mill, IT Raid, Kobe
× RELATED கோபி, சுதாகரின் அடுத்த அதிரடி; “கோடியில் இருவர்” வெப் சீரிஸ்