கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே வாஞ்சி மணியாச்சி முதல் தட்டப்பாறை 2-வது ரெயில்வே தண்டவாளத்தில் ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. கோவில்பட்டி அருகே கடம்பூர் முதல் தட்டப்பாறை வரை 35கிலோ மீட்டர் தூரம் வரை 2-வது ரெயில்வே தண்டவாள பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் வாஞ்சி மணியாச்சி முதல் தட்டப்பாறை வரை ரெயில்வே தண்டவாளத்தில் ரயில் சோதனை ஓட்டம் இன்று மாலை 4.40 மணியளவில் தொடங்கியது.
இதில் சதன் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் தலைமையில் ரயில்வே அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.இந்த சோதனை ஓட்டத்தின்போது மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.