டெல்லி: மக்களவையில் டெல்லி வன்முறை தொடர்பான விவாதத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளித்து வருகிறார். டெல்லியில் நடந்த கலவரங்களில் உயிர் இழந்த அனைவருக்கும் எனது அஞ்சலி செலுத்துகிறேன், துக்கப்படுகின்ற அவர்களது குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிப்ரவரி 25-க்குப் பிறகு கலவரம் எதுவும் நடக்கவில்லை. இந்த கலவரங்களை அரசியலாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. டெல்லி காவல்துறை விசாரணை செய்து ஒரு அறிக்கையை வரும் நாட்களில் சமர்ப்பிப்பார்கள். கலவரம் மற்ற பகுதிகளுக்கு பரவ அனுமதிக்காததற்காக டெல்லி காவல்துறையை நான் பாராட்ட விரும்புகிறேன்.