×

திருப்பதி அருகே கொள்ளையடித்த பணம் பிரிப்பதில் தகராறு: நண்பனை கொலை செய்த 2 பேர் கைது

திருப்பதி: திருப்பதி அருகே கொள்ளையடித்த பணம் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் நண்பனை கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பதியை சேர்ந்தவர்கள் கணேஷ் (24), சிவா (21), சுப்பையா (20) நண்பர்கள் 3 பேரும் திருப்பதி பஸ் நிலையம், கோவிலுக்கு தனியாக நடந்து செல்லும் பக்தர்களை மிரட்டி நகை, பணம், செல்போன் உள்ளிட்டவைகளை பறித்து செல்வது வாடிக்கையாக கொண்டிருந்தனர். கொள்ளையடிக்கும் பணத்தை 3 பேரும் பங்கு பிரித்து கொண்டு மது, மாது என உல்லாசமாக இருந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி திருப்பதி ரேணிகுண்டா ரோட்டில் கொள்ளையடித்த பணம் பிரிப்பதில் 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சிவா, சுப்பையா இருவரும் சேர்ந்து கணேஷை சரமாரி தாக்கி கத்தியால் கழுத்தறுத்து கொலை செய்து விட்டு தப்பி சென்றனர். இது குறித்து திருப்பதி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை பாரதி பஸ் நிலையத்தில் பதுங்கியிருந்த சிவா, சுப்பையா 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags : Tirupati 2 ,Tirupati , 2 arrested for murdering a friend at Tirupati
× RELATED தகாத உறவு காதலியை பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்த கண்டக்டர் கைது