டெல்லி : தமது வீட்டுக்குள் சுதந்திரமாக வரக் கூடிய ஒரே நபர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தான் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரசில் இருந்து விலகிய ஜோதிர் ஆதித்ய சிந்தியா, இன்று பாஜகவில் இணைந்தார். இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராகுல் காந்தி,கல்லூரிக் காலத்தில் இருந்து தனது நண்பராக இருப்பவர் சிந்தியா என்றும் சிந்தியா எழுப்பிய எந்தக் கேள்வியையும் தான் அலட்சியம் செய்தது இல்லை என்றும் கூறினார்.