×

சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் 2 நாட்களாக நடந்து வந்த போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்

சென்னை : போக்குவரத்து தொழிலாளர்களின் காத்திருப்புப் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் அரசு தரப்பில் யார் கலந்து கொள்வார் என அறிவிக்கக் கோரி சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் 2 நாட்களாக போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.போக்குவரத்துத் துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தொழிலாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் போக்குவரத்துத் துறை செயலாளர் உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.


Tags : Transport workers ,districts ,Chennai , Transport workers in various districts including Chennai have withdrawn for two days
× RELATED ஏஐடியூசி போக்குவரத்து சம்மேளன குழு கூட்டம்