டெல்லி : டெல்லி கலவரத்திற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக மக்களவையில் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.டெல்லி கலவரத்தைத் தடுப்பதில் மத்திய உள்துறை அமைச்சகம் தோல்வியடைந்துவிட்டதாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குற்றம் சாட்டியுள்ளார்.டெல்லி கலவரம் பற்றி உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.