மதுரை : குறிப்பிட்ட சமூகத்தினருக்கு சொந்தமான இடத்தை, அவர்களின் அனுமதியின்றி வேறு நபருக்கு விற்பனை செய்த பட்டாவை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரபட்டது. இந்த வழக்கு விசாரணையில் ராமநாதபுரம் அரண்மனையை சேர்ந்த குமரன் சேதுபதி, ராமநாதபுரம் ஆட்சியர் உட்பட 42 பேர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.