×

சி.ஏ.ஏ.விற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால் ஊழல் வழக்குகளில் சிறை செல்ல நேரிடும் என தமிழக அமைச்சர்களுக்கு அச்சம் : திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு

சென்னை : சி.ஏ.ஏ.விற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால் ஊழல் வழக்குகளில் சிறை செல்ல நேரிடும் என தமிழக அமைச்சர்களுக்கு அச்சம் உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பேரவையில் இருந்து வெளிநடப்புச் செய்த பின் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது நாடு முழுவதும் 13 சட்டமன்றங்களில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் தமிழக அமைச்சர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தால் தான் பேரவையில் சிஏஏ வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற மறுப்பதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.


Tags : Stalin ,DMK ,ministers ,Tamil Nadu ,NPR ,Udayakumar , A resolution against the NPR cannot be passed DMK to walk away from Udayakumar...
× RELATED ஸ்டாலினின் குரலில் துவங்கி எல்லோரும்...