×

இந்தோனேஷியாவில் உள்ள ஆற்றில் இரண்டு படகுகள் நேருக்கு நேர் மோதியதில் 7 பேர் உயிரிழப்பு

இந்தோனேஷியா: இந்தோனேஷியாவில் உள்ள ஆற்றில் இரண்டு படகுகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். நெதர்லாந்து நாட்டின் அரச தம்பதிகள் இந்தோனேஷியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அந்நாட்டின் கலிமண்டன் மாகாணத்தில் உள்ள சில பகுதிகளையும் அரச தம்பதிகள் பார்வையிட உள்ளனர். அங்கு படகு பயணமும் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை இந்தோனேஷிய அதிகாரிகள் மேற்கொண்டுவந்தனர். இந்நிலையில், அரச தம்பதிகள் பார்வையிட உள்ள கலிமண்டன் மாகாணத்தின் ஆற்று பகுதியில் நேற்று பாதுகாப்பு படையினர் படகில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த ஆற்றில் வேகமாக வந்துகொண்டிருந்த சுற்றுலா பயணிகள் பயணம் செய்த படகு பாதுகாப்பு படையினர் இருந்த படகு மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், சுற்றுலா பயணிகள் வந்த படகு ஆற்றுக்குள் மூழ்கத்தொடங்கியது. அந்த படகில் பலர் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து, அங்கு இருந்த பாதுகாப்பு படையினர் உடனடியாக ஆற்றில் சிக்கித்தவித்தவர்களை மீட்டனர். ஆனாலும், இந்த சம்பவத்தில் சுற்றுலா படகில் பயணம் செய்த 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர். 


Tags : river ,Indonesia , Seven , killed , two boats collide,river, Indonesia
× RELATED மங்களகோம்பை செல்லும் சாலையில் புலியூத்து ஆற்றின் குறுக்கே பாலம் தேவை