×

அரசுக்கு எதிராக கருத்து பதிவு மாவோயிஸ்ட் ஆதரவாளர் நெல்லையில் கைது

நெல்லை: நெல்லையில் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட் ஆதரவாளரை போலீசார் நேற்று கைது செய்தனர். நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்தவர் பிரேம்குமார். முதுநிலை பட்டதாரியான இவர், சில மாதங்களாக மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவாகவும், பிரதமர் மோடி மற்றும் நாட்டுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்து   தெரிவித்து வந்தார். இதை கண்டறிந்த மத்திய உளவுத்துறை, பிரேம் குமாருக்கு அறிவுரை கூறுமாறு போலீஸ் அதிகாரி மற்றும் க்யூ பிரிவு உயரதிகாரிகளுக்கு தகவல் அனுப்பியது. போலீசார் எச்சரித்தும், அரசுக்கு எதிரான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார்.சில வாரங்களுக்கு முன்பு மதுரையில், சிறை சென்று திரும்பிய மாவோயிஸ்ட் மீட்பு ஆதரவு கூட்டம் நடந்தது. இதில்  பங்கேற்ற பிரேம்குமார் மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவாகவும், மத்திய, மாநில அரசுக்கு எதிராகவும் பேசியதாக கூறப்படுகிறது. இதனையறிந்த உளவு துறையினர் அவரது நடமாட்டத்தை கண்காணித்தனர். இதையறிந்த பிரேம்குமார் தலைமறைவானார்.  மேலப்பாளையம் அருகேயுள்ள கருங்குளத்தில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த பிரேம்குமாரை, உளவு துறையினர் மற்றும் போலீசார்  நேற்று அதிகாலையில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags : supporter ,Maoist , Government, concept record, Maoist sympathizer arrested in nellai
× RELATED ஜார்க்கண்டில் 12 மாவோயிஸ்ட்கள் சரண்