×

கால்வாயில் விழுந்த பசு, கன்று மீட்பு

தாம்பரம்: தாம்பரம் அடுத்த சேலையூர் அருகே செம்பாக்கம் - வேளச்சேரி பிரதான சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மழைநீர் கால்வாய் கட்டப்பட்டு வருகிறது. நேற்று கன்று குட்டியுடன் அங்கு வந்த பசுமாடு திறந்தநிலையில் இருந்த கால்வாயில் விழுந்தது. இதை பார்த்த பொதுமக்கள்  தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, கால்வாயில் இறங்கி மாடு மற்றும் கன்றை மீட்க முயன்ற போது மூச்சு திணறல் ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, ஆக்சிஜன் சிலிண்டர்கள் முக கவசம் அணிந்து மூடப்பட்டிருந்த கால்வாயில் இறங்கி சுமார் 4 மணி நேரம் போராடி மாட்டை முதலிலும் அதன் பிறகு கன்று குட்டியையும் அடுத்தடுத்து மீட்டனர்.



Tags : canal ,calf recovery , Fallen, canal, Cow, calf, recovery
× RELATED திருவெண்ணெய்நல்லூர் அருகே கோடை காலத்திலும் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்