×

தலையில் கல்லை போட்டு வாலிபர் கொலை போதையில் தரக்குறைவாக பேசியதால் கொன்றோம்: கைதான நண்பர்கள் வாக்குமூலம்

பூந்தமல்லி: மதுரவாயலில் வாலிபரை தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த வழக்கில் நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். போதையில் தரக்குறைவாக பேசியதால் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.சென்னை மதுரவாயல், ஆலப்பாக்கம், ராஜீவ் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி (35). இவர் நேற்று முன்தினம் மதுரவாயல், பலராமன் தெருவில் உள்ள காலி மைதானத்தில் முகம் சிதைக்கப்பட்டு சடலமாக கிடந்தார்.தகவலறிந்து வந்த மதுரவாயல் போலீசார், சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர், மேலும்,  வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். பின்னர், முனுசாமியின் நண்பர்களான பிரசாந்த் (28), சதீஸ் (27), குமார் (48) ஆகிய 3 பேரை நேற்று சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தபோது, முனுசாமியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். அவர்களை கைது செய்தனர்.

அவர்கள் அளித்த வாக்குமூலமாக போலீசார் கூறியதாவது:  பிரசாந்த், கட்டிடங்களுக்கு பிளம்பிங் மற்றும் எலக்ட்ரிகல் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு முனுசாமியின் அறிமுகம் பிரசாந்திற்கு கிடைத்துள்ளது. இந்த நிலையில் தகராறு காரணமாக பிரசாந்தின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். இதனால் பிரசாந்த் வீட்டை காலி செய்துவிட்டு முனுசாமி தங்கி இருக்கும் வீட்டின் அருகே தனது நண்பர்களுடன் தங்கியுள்ளார். சம்பவத்தன்று முனுசாமி, பிரசாந்த், சதீஷ் மற்றும் குமார் ஆகிய 4 பேரும்  இரவு சம்பவ இடத்தில் ஒன்றாக அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது பிரசாந்திடம், உனது மனைவி எங்கே என்று முனுசாமி கேட்டுள்ளார். அதற்கு அவர், தன்னுடன் தகராறு செய்து விட்டு மனைவி பிரிந்து சென்று விட்டதால் தனியாக இருப்பதாக தெரிவித்தார்.

உடனே முனுசாமி “மனைவியை பார்த்துக் கொள்ளவில்லை என்றால் நீயொல்லாம் ஆன்மகனா? என தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.  இதனால் ஆத்திரமடைந்த பிரசாந்த் அங்கிருந்த கட்டையை எடுத்து முனுசாமியை அடித்துள்ளார். பின்னர் 3 பேரும் சேர்ந்து முனுசாமியை சரமாரியாக தாக்கி கீழே தள்ளியுள்ளனர்.  அங்கிருந்த கல்லை எடுத்து தலையில் போட்டு முனுசாமியை கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.



Tags : friends , Killing ,young man ,poor quality ,confessional friends, confess
× RELATED கன்னியாகுமரி அருகே ஆபாசமாக திட்டியதால் கீழே தள்ளி கொன்றோம்