×

இந்தியா வந்தது தென்னாப்பிரிக்க அணி: யாரிடமும் எதுக்கும் கைகுலுக்காதீங்க!...கொரோனா பீதியால் வீரர்களுக்கு கடும் எச்சரிக்கை

தர்மசாலா: தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்திய அணியுடன் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக டெல்லி வந்தது. இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி தர்மசாலாவில் வருகிற 12ம் தேதி தொடங்க உள்ளதால், கேப்டன் குயின்டான் டி காக் தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி தர்மசாலா சென்றது. 2வது ஒருநாள் போட்டி லக்னோவில் 15ம் தேதியும், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கொல்கத்தாவில் 18ம் தேதியும் நடைபெறுகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தென்னாப்பிரிக்க அணியினருடன் டாக்டர் சுயப் மஞ்ச்ரா தலைமையிலான டாக்டர்கள் குழுவும் வந்துள்ளது. இதுகுறித்து, அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் கூறுகையில், ‘‘அணியின் மருத்துவர் சொல்லும் அறிவுரையின்படி நாங்கள் செயல்படுவோம்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்திய வீரர்களுடன் முறைப்படி கைகுலுக்குவது குறித்து சூழ்நிலைக்கு தகுந்தபடி முடிவு செய்யப்படும். வீரர்கள் மற்றுமின்றி ரசிகர்கள், பார்வையாளர்கள், அதிகாரிகள் என, எவரிடமும் கைகுலுக்குவதை தவிர்க்கவே அறிவுறுத்தி உள்ளோம். இதனை முறையாக பின்பற்றினால் நன்றாக இருக்கும். எங்கள் தோழர்களுக்கு எதுவும் நடப்பதைத் தடுப்பதற்கான ஒரு வழி இது என்று நான் நினைக்கிறேன்’’ என்றார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்க அணி வீரர்களிடம், ரசிகர்களுடன் கைகுலுக்கவும், கலந்துரையாடவும், செல்பி எடுக்கவும் தடை விதிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Tags : South Africa Team ,Corona Panic India ,anyone ,South Africa , India, South African Team, Corona, Warning
× RELATED தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான...