×

கோவையில் இந்து முன்னணி அலுவலகத்தின் மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு

கோவை : கோவையில் இந்து முன்னணி அலுவலகத்தின் மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கோவை கோணார் வீதியில் உள்ள இந்து முன்னணி அலுவலகம் மீது இந்த பெட்ரோல் குண்டு வீச்சு நடந்துள்ளது. வழக்கம் போல் ஊழியர்கள் ஒருவர் அலுவலகத்தை திறக்க வந்த போது, உடைந்த பாட்டில்கள் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் இந்து முன்னணி அமைப்பினருக்கு தகவல் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து காவல் துறையினருக்கும் தகவல் கிடைக்க சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு வந்த சட்டம் ஒழுங்கு துனை ஆனையர் பாலாஜி இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் அருகில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டார். மேலும் அங்கு அருகில் சிசிடிவி கேமராவில் சம்பவம் தொடர்பாக பதிவாகி உள்ளதா எனவும் விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தில் கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்களும் சோதனை செய்து வருகின்றனர். பெட்ரோல் குண்டு வீச்சு காரணமாக அலுவலகத்துக்கு போலீஸ் காவல் போடப்பட்டு உள்ளது.  கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையில் இந்து முன்னணி நிர்வாகி மீது மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக 3 தனிப்படைகளை அமைத்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்து முன்னணி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Tags : front office , Mysteries, Petrol, Bombing, Coimbatore, Hindu Front Office
× RELATED மதுரையில் ஆட்சியர் அறை முன் அலுவலக உதவியாளர்கள் போராட்டம்