×

தோட்டக்கலை பயிர்களை தாக்கும் அமெரிக்க பூச்சிகள்: கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை

தமிழகத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தோட்டக்கலை பயிர்களில் அமெரிக்காவின் ரூகோஸ் ஸ்பைரலிங் என்ற வெள்ளை ஈ தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்பட்டுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் பரவி பயிர்களை தாக்கும் வைரஸ் நோய்கள் விவசாயத்தை மட்டுமின்றி காடுகள், கால்நடைகள், சுற்றுச்சுழல் ஆகியவற்றையும் பாதிக்கின்றன. இதுநாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கிறது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவு பொருட்கள் மூலம் அந்நாட்டு வைரஸ் பூச்சிகள் ஊடுருவுகின்றன. அந்த வகையில் அமெரிக்காவின் ரூகோஸ் ஸ்பைரலிங் என்ற வெள்ளை ஈ வைரஸ் பூச்சிகள் தற்போது தமிழகத்தில் தென்னை, பாக்கு, கொய்யா, வாழை, பப்பாளி, பலா, அருநெல்லி, மாதுளை உள்ளிட்ட பயிர்களை அதிகம் தாக்குகின்றன. இதில் தென்னைக்கு அதிகம் பாதிப்பு. விவசாயிகள் இந்த பூச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் வேதனையில் உள்ளனர்.
இவை இலைகளின் அடியில் கூடுகட்டி சத்துக்களை உறிஞ்சுகின்றன. இலை களின் அடிப்பரப்பில் வட்ட அல்லது சுருள் வடிவில் 50 முதல் 60 முட்டைகளில் இருந்து குஞ்சுகள் 4 முதல் 7 நாட்களில் வெளியாகி 15 நாட்கள் வரை சாறு உறிஞ்சும். இதன் இரண்டாம் வினையாக அதில் வடியும் தேன் மூலமாக இலை மீது கருகப்பாக ஒரு பூஞ்சை வளர்கிறது. இதனால் ஒளிசேர்க்கை பாதிக்கப்பட்டு மகசூல் கடுமையாக பாதிக்கிறது.

இதுகுறித்து தோட்டக்கலைத்துறை  உதவி இயக்குனர் இளவரசன் கூறுகையில், ரூகோஸ் ஸ்பைரலிங் வைரஸ், அமெரிக்காவில் இருந்து இந்தியா வுக்கு ஊடுருவியுள்ளது. இதுபோன்ற பல்வேறு பூச்சியினங்கள் பயிர்களை தாக்குவதால் உலக அளவில் ஆண்டுதோறும் 100 பில்லியன் டாலர் அள விற்கு சேதம் மற்றும் இழப்பு உண்டாகிறது. சுமார் 25 சதவீத அளவிற்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இவ்வகையான பூச்சிகள் உயிரியல் சமநிலையை பாதித்து பிறகு அழிவை ஏற்படுத்துகிறது. உலகமயமாக்கல் மூலமாக உலகின் ஓரிடத்தில் விளைந்த பொருட்கள், தானியங்கள் மற்ற நாடுகளில் உள்ள மக்களுக்கு தற்போது எளிதில் கிடைக்கிறது. இது தீங்கிழைக்கும் உயிரினங்கள் பரவ எளிதில் வழிவகுக்கிறது. ரூகோஸ் ஸ்பைரலிங் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு ஒருங்கிணைந்த முறை யில் இந்த பூச்சியை கட்டுப் படுத்தலாம்.  பாதிப்பை குறைக்க தாய் பூச்சிகளை கவரும் வகையில் ஏக்கருக்கு 7 எண்கள் வீதம் மஞ்சள் நிற ஓட்டும் அட்டை பொறிகளை வைக்க வேண்டும். மாலை நேரத்தில் தோட்டத்தில் உலர்ந்த தென்னை ஓலைகளை அரை மணிநேரம் எரிக்கலாம். இவ்வாறு செய்தால் பூச்சிகள் நெருப்பில் விழுந்து மடியும்.

ஒரு லிட்டர் வெர்டிசிலியம் பூஞ்சாணத்தை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். ஒட்டுண்ணிகளான என்கார்ஸ்யா செய்டெரிஸ் அல்லது என் கார்சியா காடெல்பே ஆகியவற்றை 1 ஏக்கருக்கு 100 எண்கள் அளவில் பாதிக் கப்பட்ட பயிர்களில் விடுவதன் மூலமும் கட்டுப்படுத்தலாம். இலையின் மேல் காணப்படும் கரும் பூஞ்சாணங்களின் மீது மைதா மாவு பசை கரை சலை தெளிக்கலாம். வேப்ப எண்ணெய் 3 சதவீதம் அல்லது வேப்பங்கொட் டை சாறு 5 சதவீதம் தெளிக்கலாம். வேரில் ரசாயன மருந்து செலுத்துதல், தெளித்தால் கூடாது. அவ்வாறு செய்தால் அதன் இயற்கை எதிரிகள் அழிந்து  புட்சியை கட்டுப்படுத்த முடியாமல் போகும். இவ்வாறு இளவரசன் கூறினார்.

Tags : American ,growers , Cultivation
× RELATED சென்னையில் இருந்து விமான நிலையம் வந்த...