×

திருவாடானை அருகே வயலில் வைத்த தீயால் 25 ஆடுகள் கருகி பலி

திருவாடானை: திருவாடானை அருகே வயலில் வைத்த தீயால், 25 ஆட்டுக்குட்டிகள் பட்டியிலேயே பரிதாபமாக கருகி இறந்தன. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே அடுத்தகுடி கிராமத்தை சேர்ந்தவர்கள் நாகூரான், முருகேசன். இவர்கள் மயிலாடுவயல் கிராம வயலில், 200க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளுடன் கிடை போட்டுள்ளனர். நேற்று காலை ஆடுகளை மேய்ச்சலுக்காக அனுப்பி விட்டு 25 ஆட்டுக்குட்டிகளை பெரிய ஓலைகளால் வேயப்பட்ட குடுவையில் கொண்டு மூடி விட்டு சென்று விட்டனர்.

இந்நிலையில் ஆட்டுக்குட்டிகள் இருந்த வயலில், கிடந்த வைக்கோலில் யாரோ தீ வைத்துள்ளனர். இதில் தீ மளமளவென பரவி ஆட்டுக்குட்டிகளை அடைத்து வைத்திருந்த குடுவை மீது பற்றி எரிந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 25 ஆட்டுக்குட்டிகளும் கருகி பலியானது. தகவலின்பேரில் திருவாடானை தாசில்தார் சேகர், சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரித்தார்.

Tags : field ,Thiruvadan , Tiruvatanai
× RELATED அசாமில் 7 ரயில்கள் ரத்தால்...