×

சென்னையில் பிரபல ரவுடி கைது

சென்னை: சென்னையை சேர்ந்த பிரபல ரவுடியான புளியந்தோப்பு எழில் அதிகாலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக இருந்த எழில் தனது கூட்டாளிகள் மூலம் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். கைது செய்யப்பட்ட எழில் பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் ஆற்காடு சுரேஷின் நெருங்கிய கூட்டாளி ஆவார். வெளியூரில் தலைமறைவாக இருந்த எழில் இன்று அதிகாலை புளியந்தோப்பு வந்தபோது அவரை போலீஸ் கைது செய்தது.


Tags : Chennai Rowdy ,arrest ,Chennai , Chennai, celebrity rowdy, arrested
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...