ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் ரேபான் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள் வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். வீரர்கள் நடத்திய பதிலடியில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் அங்கிருந்து தப்பி சென்றதாக தெரிகிறது. அந்த பகுதியில் வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.