×

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்

ஜம்மு: காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பூஞ்ச் மாவட்டத்தின் எல்லையில் உள்ள கிராமங்களில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம்  அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதுகுறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், ``நேற்று அதிகாலை 12.15 மணியளவில் ஷாபூர் பகுதியில் உள்ள இந்திய ராணுவ நிலைகள்  மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் மார்டர் ரக குண்டுகள் வீசியும், துப்பாக்கிச்சூடும் நடத்தினர்.

பாகிஸ்தானின் எல்லைக் கடந்த தாக்குதலுக்கு இந்திய  ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானின் வெடிகுண்டு வீச்சு, துப்பாக்கிச்சூட்டில் இந்திய தரப்பில் உயிரிழப்புகள் ஏதும் இல்லை’’ என்றார். காஷ்மீருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று சென்றிருந்த நிலையில், எல்லையில், இந்த தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags : Pakistani ,Military ,attack , Military ,Pakistan, Infernal attack
× RELATED சிறையில் உள்ள இம்ரானுடன் மனைவி சந்திப்பு