×

வாக்கிங் சென்ற வாலிபரை வெட்டி செல்போன் பறிப்பு: 2 பேர் கைது

தண்டையார்பேட்டை: பழைய வண்ணாரப்பேட்டை மாடல் லைன் 9 வது தெருவை சேர்ந்தவர் டேவிட் ராஜ் (28). தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று காலை சிமென்ட்ரி ரோடு அண்ணா பூங்கா அருகே வாக்கிங் சென்றபோது பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், டேவிட்டிடம் இருந்து செல்போனை பறித்தனர். அவர் கொடுக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த மர்ம நபர்கள், டேவிட் தலையில் கத்தியால் வெட்டி விட்டு செல்போனை பறித்து தப்பிச்சென்றனர். இதுகுறித்து ராயபுரம் போலீசில் டேவிட் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் திருவொற்றியூர் அடுத்த எண்ணூர் சுனாமி குடியிருப்பு 10வது பிளாக்கை சேர்ந்த மணிகண்டன் (எ) டியோ மணி (24) மற்றும் அவனுடைய நண்பரும் சேர்ந்து டேவிட் தலையில் வெட்டிவிட்டு செல்போன் பறித்து சென்றது தெரிய வந்தது. அவர்களை போலீசார் நேற்று கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : persons , Walking, Plaintiff, cellphone extortion, 2 people, arrested
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...