சென்னை: தமிழகத்தில் தனி நபர் எத்தனை பேருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது என டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கத்தைச் சேர்ந்த குப்புசாமி என்பவர் போலீஸ் பாதுகாப்பு தரக்கோரி நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். இந்த வழக்கில் எத்தனை பேருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்று 12-ம் தேதிக்குள் பதில் தர டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.