×

மானூர் அருகே கட்டாரங்குளத்தில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க கிராம மக்கள் வலியுறுத்தல்

நெல்லை: மானூர் அருகே உள்ள கட்டாரங்குளத்தில் ஊர் நிலம் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜ, இந்து முன்னணியினருடன் வந்து கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். நெல்லை அடுத்த மானூர் அருகே உள்ள கட்டாரங்குளம் கிராமத்தில் ஊருக்கு சொந்தமான 22 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரசு அதிகாரிகள், தமிழக முதல்வர், காவல் துறை உயரதிகாரிகளுக்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மானூர் கிராம நிர்வாக அலுவலர், மானூர் தாசில்தார் ஆகியோர் முறையாக விசாரணை நடத்தவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் இந்து முன்னணி கமிட்டி தலைவர் பொன்ராஜ் தலைமையில் கலெக்டரிடம் மனு அளித்தனர். அப்போது பாஜ நிர்வாகிகள் வக்கீல் குற்றாலநாதன், சுரேஷ், வேல்ஆறுமுகம், இந்து முன்னணியினர் மற்றும் கிராம மக்கள் உடன் சென்றனர்.

Tags : Manoor Manor ,Katarangulam , Manor, occupied land, villagers, emphasis
× RELATED மானூர் அருகே கல்லூரி மாணவரை மிரட்டிய இருவர் கைது