நன்றி குங்குமம் முத்தாரம்
ஆப்கானிஸ்தானில் பிறந்த குழந்தைக்கு ஆரம்பக் கல்வி என்பதே பெருங்கனவு. அங்கே நிலவி வரும் இக்கட்டான சூழல்தான் இதற்கு முதன்மைக் காரணம். சுமார் 37 லட்சம் ஆப்கானிய குழந்தைகள் பள்ளிக்கூடத்தின் வாசனையையே அறியாமல் இருக்கிறார்கள். இதில் 60 சதவீதம் பெண் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் குழந்தைகளின் கல்விக் கனவை நனவாக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது யுனிசெஃப் அமைப்பு.