×

உசிலம்பட்டி அருகே 3 மாதமேயான பெண் குழந்தை திடீர் இறப்பு சிசு கொலையா?

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (30) பெங்களூரில் ஐடி கம்பெனியில் வேலை செய்கிறார். இவர்களுக்கு 2 வயதில் யுவ என்ற பெண் குழந்தையும், 3 மாதத்தில் மோனிஷா  என்ற பெண் குழந்தையும் இருந்தனர். கட்டக்கருப்பன்பட்டியிலுள்ள தாய் வீட்டில் கலாவதி வசித்து வந்துள்ளார். நேற்று கைக்குழந்தையை குளிக்க வைத்தபோது  மூச்சு அடைத்துள்ளது. மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது டாக்டர்கள்  குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து குழந்தை இயற்கையாகவே இறந்ததா அல்லது பெண் சிசு கொலையா என விசாரிக்கின்றனர்.

Tags : death ,baby ,Usilampatti , Sudden death of a 3-month-old baby near Usilampatti?
× RELATED ஜெய், யோகி பாபு இணையும் பேபி அன்ட் பேபி