×

விளையாட்டுப்போட்டி பரிசளிப்பு விழாவில் தகராறு 2 ரவுடிகள் வெட்டிக்கொலை: பொன்னேரி அருகே பரபரப்பு

சென்னை:  வாலிபால் போட்டி பரிசளிப்பு விழாவில் நடந்த தகராறில் 2 ரவுடிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வேண்பாக்கம் பள்ளம் பகுதியை சேர்ந்தவர் வீரா (28). அதே பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (28). நெருங்கிய நண்பர்கள். இவர்கள் மீது வழிப்பறி, அடிதடி, கொலை முயற்சி என பல்வேறு வழக்குகள் பொன்னேரி, திருப்பாலைவனம், சோழவரம் மற்றும் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது.பொன்னேரி அடுத்த ஆலாடு  கிராமத்தில் வாலிபால் போட்டி நேற்று காலை நடைபெற்றது. மாலையில் நடந்த  பரிசளிப்பு விழாவை பார்ப்பதற்காக  இருவரும் சென்றனர்.  அப்போது  அவர்களுக்கும் அங்கிருந்த சில வாலிபர்களுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. இதனால் ஆத்திரமடைந்த சிலர், அங்கிருந்த உருட்டுக்கட்டையை எடுத்து இருவரையும் சரமாரியாக அடித்துள்ளனர். கத்தியாலும் வெட்டியுள்ளனர். இதில், கிழே விழுந்த இருவரது தலையில் கல்லை தூக்கி போட்டுவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

  தகவலறிந்த பொன்னேரி போலீஸ் உதவி கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி. இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், எஸ்ஐ மகாலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இரண்டு வாலிபர்களையும் கொலை செய்தவர்கள் யார். எதற்காக கொலை நடந்தது என பொன்னேரி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் ஒரே பகுதியைச் சேர்ந்த 2 ரவுடிகள் கொலை செய்யப்பட்டதால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பள்ளம் மற்றும் இரட்டை கொலை  நடந்த பகுதியில் மேலும் மோதல் ஏற்படாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags : matchups ,clash , 2 matchups ,clash , match match, prize
× RELATED கூட்டணி ஒருங்கிணைப்பு கூட்டத்தில்...