×

தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 12 பேருக்கு குண்டாஸ்

சென்னை: தொடர் குற்றங்களில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் நாகமணி உட்பட 12 பேரை குண்டர் சட்டத்தில் போலீசார் சிறையில் அடைத்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட திருட்டு வழக்கில் தொடர்புடைய பிரபல கொள்ளையன் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த நாகமணி (40), கஞ்சா வழக்கில் தொடர்புடைய மண்ணடி மலையப்பன் தெருவை ேசர்ந்த முகமது அசாருதீன் (33), காதர் முகைதீன் (27), கொலை வழக்கில் தொடர்புடைய கீழ்ப்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்த தொண்டை வலி வினோத் (24), பெரம்பூர் சிஸ் ரோடு பகுதியை சேர்ந்த பால் பிரவீன் (26), கஞ்சா மற்றும் அடிதடி வழக்கில் தொடர்புடைய தண்டையார்பேட்டை ராஜசேகரன் நகரை சேர்ந்த அக்பர்கான் (26), லோகநாதன் (எ) கானா லோகு (24), மகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த திருநின்றவூர் அண்ணாநகரை சேர்ந்த அருள் (40), கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய திருவொற்றியூர் நந்தி ஓடை பகுதியை சேர்ந்த செல்வம் (31), பெண்களை ஆபாசமாக படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டி வந்த விருதாச்சலம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (24), லோன் வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட தஞ்சை மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த செல்வபிரபு (28), நங்கநல்லூர் ஜான் தேசிகர் தெருவை சேர்ந்த சிவகுமார் (29) ஆகிய 12 பேரை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Tags : crimes ,series , Gundas,12 people, involved , serial crimes
× RELATED மகளிர் பிரீமியர் லீக் தொடர்:...