×

பேருந்துகள் மீது டேங்கர் லாரி மோதல் 32 பேர் பரிதாப பலி

டமாஸ்கஸ்:  சிரியாவில் இரண்டு பேருந்துகள் மீது எரிபொருள் ஏற்றி சென்ற டேங்கர் லாரி மோதியதில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ்சில் இருந்து  ேஹாம்ஸ் மாகாணம் ேநாக்கி பேருந்துகள் சென்று கொண்டிருந்தன. இதில் ஏராளமான ஈராக் பயணிகள் இருந்தனர். இவர்கள், டாமஸ்கஸ்சில் உள்ள புனித தலத்தை தரிசிப்பதற்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது, எரிபொருள் ஏற்றிய டேங்கர் லாரி ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, 15 வாகனங்கள் மற்றும் 2 பேருந்துகள் மீது மோதியது. இந்த பயங்கர விபத்தில் மொத்தம் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 77 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.



Tags : Bunker Kills , Tanker lorry, collision , buses, kills 32
× RELATED மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலம் மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் நாளை பதவியேற்பு