×

சமூக ஆர்வலர் பியூசுக்கு ஜாமீன்

சேலம்: சேலம் ஏற்காடு அடிவாரம் பகுதியை சேர்ந்த ஆஷாகுமாரி (53) என்பவர்,  தனது வீட்டில் குடியிருக்கும் சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் ஒப்பந்தம் முடிந்த நிலையில் காலி செய்ய மறுத்து ஆபாச வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் கூறியிருந்தார். இதன்படிகன்னங்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து பியூஸ் மானுஷை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். அவர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி குமரகுரு விசாரித்து, வேலூரில் தங்கியிருந்து 1வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கினார்.



Tags : Fuse , Social activist Fuse Manush, bail
× RELATED நாளை முதல் பொது சேவை மையங்களில் ரயில்...