×

கேங்மேன் பயிற்சி எழுத்துத்தேர்வு தடையில்லா மின்சாரம், போலீஸ் பாதுகாப்பு: மின்வாரியம் திட்டம்

சென்னை: கேங்மேன் பயிற்சி எழுத்துத்தேர்வு நடக்கும் இடங்களில் தடையில்லா மின்சாரம் மற்றும் போலீஸ் பாதுகாப்பு வழங்குவதற்கு தமிழக மின்சாரவாரியம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கடந்த 7.3.2019ல் 5000 கேங்மேன் (பயிற்சி) பதவிக்கான தேர்வு குறித்து அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பலரும் விண்ணப்பித்தனர். பிறகு அவர்களுக்கான உடல்தகுதி தேர்வை மின்வாரியம் நடத்தியது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எழுத்துதேர்வு, 15.3.2020 அன்று நடத்தப்படுகிறது. இதற்கான நுழைவு சீட்டு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் www.tangedco.gov.in இணையதளத்திலும்  பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்நிலையில் சம்மந்தப்பட்ட தேர்வானது மாநிலம் முழுவதும் ஓஎம்ஆர் முறையில் 30 மையங்களில் நடத்தப்படுகிறது. எனவே அன்றைய தினம் தேர்வு நடத்தப்படும் இடங்களில் தடையில்லா மின்சாரம் மற்றும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Gangman, Training Writing, Electricity, Police Security, Power
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...