×

வீட்டில் டியூஷன் எடுப்பதாகக் கூறி மதுபோதையில் சிறுமிகளை பலாத்காரம் செய்த ஆசிரியர்: செருப்பால் அடித்து போலீசில் ஒப்படைத்த பெற்றோர்

திருமலை: தெலங்கானா மாநிலம், நாகர் கர்னூல் மாவட்டம், பெத்தாபுரத்தை சேர்ந்தவர் சரத். இவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வனபர்த்தி மாவட்டம், கோபால்பேட்டா மண்டல கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து சரத், தனது வீட்டில் 5ம் வகுப்பு மாணவிகளுக்கு டியூஷன் எடுப்பதாகக் கூறியுள்ளார். இதனால், தனியார் பள்ளியின் 5ம் வகுப்பு மாணவ, மாணவிகள் ஏராளமானோர் சரத்திடம் டியூஷனுக்கு சேர்ந்தனர். இவர்களில் பல சிறுமிகளை  மதுபோதையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதில் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர், தனது பெற்றோரிடம்  நடந்ததை கூறியுள்ளார். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த அவர்கள், மற்ற பெற்றோர்களுடன சென்று தலைமை ஆசிரியர் ராமசாமியிடம் முறையிட்டனர். பின்னர்,  கொலப்பூர் என்ற இடத்துக்கு தேர்வு எழுத சென்ற சரத்தை அவர்கள் தேடிச் சென்று செருப்பால் அடித்து உதைத்து, போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Teacher ,girls ,home ,parents ,rapist ,Alcoholic , Alcoholic, girl, rapist, teacher
× RELATED அரசு ஊழியர்கள் மீது கரிசனை போல...