சென்னை: சமூக ஊடகங்களில் சேரப்போவதாக தமது பெயரில் வெளியான கடிதத்துக்கு நடிகர் அஜித் மறுப்பு தெரிவித்துள்ளார். தமது பெயரை பயன்படுத்தி போலி கையெழுத்து போட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அஜித்குமார் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் சமூக ஊடக கணக்கு எதுவும் தமது பெயரில் இல்லை எனவும் நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.